Monday, April 27, 2009

கூகுள் படுத்தும் பாடு தாங்க முடியலை


வலைதளங்களில் கூகுள் பண்ணும் ரவுசும் புதுமையும் விளக்கி விவரிக்கவியலாவண்ணம் வியக்கும்படி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சொல்லி அடிப்பது ஒரு கலை இவர்கள் சொல்லாமல் அடிக்கிறார்கள், கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். விவரமறிய........

கடந்த இரு தினங்களாக கூகுள் தேடலுக்காக அப்பக்கம் சென்றபோது கூகுள் பக்க முகப்பு வித்தியாசமாக இருந்தது. நீங்களும் கவனித்திருப்பீர்கள். ஏதோ சிறிய கோடுகள்ம் புள்ளிகளும் மாத்திரம் தெரிந்தது. நான் எனது பிரவுசர் கோளாறு என்று நினைத்து விட்டுவிட்டேன். ஒவ்வொரு முறை தேடும் போதும் எனக்கு அது கேள்விக்குறியாகவே இருந்தது. உண்மை என்ன என்று அதில் மவுஸை வைத்து கிளிக்கினார் சாமுவேல் மோர்ஸ் என்பவரைப் பற்றீய விக்கிப்பேடியா தளத்திற்கு என்னை இட்டுச் சென்றது. பிறகுதான் தெரிந்தது, மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சேவைக்கு பயன்படுத்தப்படுகிற கோட் முறையை கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் என்பவரின் பிறந்த நாள் ஏப்ரல்27 என்பதினாலும் அவரை நினைவுபடுத்தி பெருமைப்படுத்தவே கூகுள் இவ்வாறு செய்திருக்கிறது என்றும் அறிந்தேன். மோர்ஸ் கோட் உண்மையிலேயே வித்தியாசமாக இருக்கிறது. நல்ல ஒரு லாட்டரல் திங்கிங். யாராவது இரகசியம் காக்க தாராளமாக மோர்ஸ் கோடை பயன்படுத்தலாம் என்று நோபல் பரிசு பெறாத நான் பரிந்துரைக்கிறேன். கீழே நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

- .... .- -. -.- -.-- --- ..-

மோர்ஸ் கோடுக்கும் நாம் இன்று கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் பைனரி இலக்க முறைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. விவரமறிந்த வித்துவான்கள் விளக்கினால் அவர்களுக்கு எனது ஓட்டு உண்டு. கீழே மோர்ஸ் கோட் விளக்கப் படம்.


அஸ்கு: பிஸ்கு அண்ணா, மோர்ஸ் கோட் என்ற ஒன்று இருப்பதே எனக்கு இன்றுதான் தெரியும்.

பிஸ்கு: அவரை மற்ற நாடுகள் எல்லாம் பெருமைப்படுத்திய பின் தான் அமெரிக்கா அவரை கனப்படுத்தியது என்பதும் எனக்கு இன்றுதான் தெரிந்தது.

அஸ்கு: இது குறித்து உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

பிஸ்கு: நம்ம நாட்டுல உள்ளவங்க இங்கே ஒன்றையும் செய்ய முடியாமல் வெளி நாட்டிற்கு சென்று சாதித்த பின் அவர்களை எங்கள் மண்ணின் மைந்தர் என்று பெருமைப் பட்டுக் கொள்ளும் இந்திய அரசுதான். (கல்பனா சாவ்லா, அமர்த்தியா சென், சபீர் பாட்டியா...)

அஸ்கு: மேலை நாடுகள் போல இங்கே புதுக் கண்டுபிடிப்புகள் ஏதும் வரமாட்டேங்குதே. ஏன்?

பிஸ்கு: அவர்கள் கண்டுபிடிப்பில் வல்லவர்கள். இங்கே குறை கண்டுபிடிப்பதில் வல்லவர்கள் அதான். இங்கே ஒருவன் ஏதாவது புதிதாக கண்டு பிடிக்க நினைத்தால் அவனுக்கு உதவி கிடைக்காமலிருப்பது ஒரு பக்கம் என்றால் அவன் படும் போராட்டங்கள் ஏளனங்கள் இப்படி எல்லாம் ஒன்று சேர்ந்து அவனை ஆராய்ச்சியிலிருந்து துரத்திவிடுகின்றன. அப்படியும் அவன் ஏதாவது சாதித்துவிட்டால் பண முதலைகள் அவனை விழுங்க காத்துக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளில் ஒருவன் புதிதாக் கண்டு பிடிக்க முனைந்தால் அவனுக்கு எல்லாரும் ஒத்துழைப்பார்கள். அப்படி பலர் ஒத்துழைத்ததின் விளைவுதான் இந்த கூகுள் தேடல் பக்கமும் கூட.

அஸ்கு: நம் நாட்டில் இப்படி நடக்க என்ன செய்யணும்?

பிஸ்கு: -.. .-. . .- --

8 comments:

johnindia said...

Romba interesting info anna. Last line-la good punch :)

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல்.

இராகவன் நைஜிரியா said...

மிக்க நன்றி. அழகான, அருமையான, பயனுள்ள இடுகை.

தெய்வமகன் said...

கலக்கிட்டிங்க

Suresh said...

நானும் உங்கள மாதிரி பார்த்து படித்து தெரிந்து கொண்டேன் ஆனா நிங்க பகிர்ந்து கொண்டிர்கள் அது அருமையிலும் அருமை தலைவா

Suresh said...

நாங்க் இனி உங்க பாலோவர்

Annaraj Ponpandi said...
This comment has been removed by a blog administrator.
அஸ்குபிஸ்கு said...

பாராட்டி பாலோவர்கள் ஆன அண்ணாச்சிகளுக்கும் கருத்துரையை கருத்துடன் வழங்கின ஐயாக்களுக்கும் நன்றி

Post a Comment