Sunday, April 26, 2009

இந்திய தேர்தல் எதிரொலி இலங்கை போர் நிறுத்தம்??

இன்று காலை கலைஞர் அவர்கள் உண்ணாவிரதம் ஆரம்பித்திருப்பது அனைவரும் தெரிந்ததுதான். அவர் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பே அப்படிப்பட்ட நிலையை அவர் எடுப்பார் என்று ஆரூடம் சொல்லப்பட்டது.

தேசிய அளவில் இதுவரையிலும் இலங்கப் பிரச்சனை பேசப்படாமல் இருந்தது. இப்போது தமிழக தேர்தல் நெருங்கிவிட்டதால் தமிழகத்தின் பிரச்சனைகளை பேச வேண்டிய கட்டாயம் பிஜேபிக்கும் உள்ளது. ஆகவே அவர்களும் இப்போது களத்தில் குதித்துள்ளனர்.(கவனிக்க:அத்வானி பேட்டி)

தமிழகத்தில் பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் இலங்கைப் பிரச்சனையையே அம்மையார் முழங்குவதாலும், இதுவரை தோன்றாத ஞானோதோயம் ஒரு குருஜியின் சிடியைப் பார்த்தவுடனே வந்ததாகவும் சொல்லிக் கொள்ளும் அம்மையார் இதுவரை உண்மை உரைத்த தமிழர்களை எல்லாம் முட்டாளாக்கி தெர்தலில் வெற்றி பெற்று எல்லாரையும் முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். மக்களை முட்டாளாக்குவதில் கலைஞரை யாராகிலும் மிஞ்ச முடியுமா என்ன? அல்லது அதற்கு 'கை' கொடுப்பவர்கள்தான் விட்டுவிடுவார்களா?

எத்தனையோ முறை அறிக்கையிஉலும் பேட்டிகளிலும் தனது உயிரை தமிழுக்காக கொடுத்த கலைஞர் வாழப்போவது இன்னும் கொஞ்ச சில நாட்கள். அதில் பெரிதாக சாதிக்கப் போவது எதுவுமில்லை. எனவே தனது உயிரை உண்மையாகவே பொருட்படுத்தாது உண்ணாவிரத முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது நல்ல பலனைத்தரும் என்று அரசியல் ஜோசியர்கள் கூறுகின்றனர். காங்கிரஸ் கட்சியும் அடுத்த முறை ஆட்சிக்கு வர சில சீர்கள் தேவைப்படுவதால் தனது கொல்லும் கொள்'கை'யை ஒரு ஓரமாக வைத்துவிட்டு இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை இன்று மாலைக்குள் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.

பொறுத்திருந்து பார்ப்போம். ஜெயிப்பது உண்ணாவிரதமா அல்லது எமனா என்று?

அஸ்கு: உண்ணாவிரதம் நல்ல பயன் தருமா?

பிஸ்கு: நிச்சயம் பயன் தரும். ஆனால் தாயகத்தில் அப்படி இருக்கும் 11 பேரையும் கூட்டி பக்கத்தில் வைத்துக் கொண்டு இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும். இப்போ அவர்கள் இதுவரை இருந்தது உருட்டடிப்பு செய்யப்பட்டுவிடும்.

அஸ்கு: இலங்கை காங்கிரஸ் குரலுக்கு செவிகொடுக்குமா?

பிஸ்கு: அமெரிக்க காங்கிரஸ், மற்றும் ஐநா சபைக்கு செவிமடுக்காத இலங்கை காங்கிரஸ் குரலுக்கு செவிமடுக்கும். ஆனால் இப்போதல்ல. எல்லோரையும் கொன்று முடித்த பின்பு.


3 comments:

latchoumanan velavan said...

only for election he made it.

வந்தியத்தேவன் said...

இலங்கையில் இலத்திரனியல் ஊடகங்கள் எதிலும் யுத்தம் நிறுத்தம் என்ற பேச்சே இல்லை யாரை ஏமாற்றுகின்றார் தமிழக முதல்வர்.

Anonymous said...

its not ceasefire. just another drama by mk.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmHome.aspx

Sri Lanka army 'to stop shelling'
http://news.bbc.co.uk/2/hi/south_asia/8020048.stm

Post a Comment