Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Thursday, April 23, 2009

கருணாநிதி கவிதைக்கு எதிர்கவிதை: ஒன்றுகூடினோம் கொன்றே தீருவோம்




திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள ஒன்று கூடுவோம் வென்றே தீருவோம் கவிதைக்கு எதிர்கவிதை


உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடுவோம்
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடிக்கொண்டிருகிறோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று கூறி நடிக்கும் தலைகள் கண்டு வாடினோம்

ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்
அதன் பின்பு வந்தவர் சுணக்கம் காட்டி சுண்டிவிட்டனர்.
விடுதலைப் புலிகள் போராளிகள் என்று முழங்கியோர்
இன்று அவர்களைக் காறுகின்றனர் கரும்புள்ளிகள் என்று
தலைவனை வீழ்த்தினதால் தமிழ்தலைவனது சாவை விரும்புகின்றர்
அதற்Kஆக நம்மை தனிழக தலைவர்களே பிரிக்க முயல்கின்றனர்


சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
ஈழத தமிழர்களின் உரிமை
அதை ஒத்துக் கொள்ள மறுத்து
அவர்களுக்கு ஒத்தூதும் நம் அரசியல் சாணக்கியர்கள்
யாரை ஆதரிக்கிறார்கள் எவரை பிரிக்கிறார்கள்

இவர் போல் ஏமாற்றி, எம்மவரின் சாவில் குளிர்காயும்
இழிஞரின் சூழ்ச்சி கண்டு
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இலங்கைத் தமிழர் இல்லாமல் போவதற்கு முன்பு
இறைவனை வேண்டி தமிழராஇ நாம் கூடுவோம்
காங்கிரஸ் கட்சி காக்காது நம் சோதரரை
அவரிடம் கூவி கூவி அறிக்கைவிடுவார்
ஆனால் கேவிக் கேவி அழுவதோ தமிழினமல்லவா
இவர் கூவி விடியல் வந்துவிடப் போவதில்லை
இவர் கூறி தமிழினமும் அழியப் போவதில்லை

முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? தமிழ் அரசியல்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?

கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?
அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.

அஸ்கு: அண்ணே கவித எல்லாம் எழுதுறீங்க. எப்படிண்ணே!

பிஸ்கு: ரொம்ப சிம்பிள். வரிகளை வெட்டி வெட்டி எழுதினா கவிதை. நீட்டமா எழுதினா உரைநடை, யாருக்கும் புரியாதபடி எழுதினா தொல் இலக்கியம்.

அஸ்கு: யாருக்குமே புரியாதபடி பேசினா??????/

பிஸ்கு: அப்படிப் பேசுறவன் லூசா இருக்கணும்........இல்லன்னா இந்திய அரசியவாதியா இருக்கணும்.

அஸ்கு: இந்த இரண்டுமே இல்லன்னா?????

பிஸ்கு: அப்ப அது நீதான்....

இந்தியாவைப் பற்றி பெருமையாய் பீத்திக் (பேசிக்) கொள்ள சில விசயங்கள்


உலக வரலாற்றில் இந்திய நாடு இதுவரைக்கும் எந்த நாடு மீதும் படையெடுத்ததில்லை.
(ஏனெனில் உட்சண்டைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை இன்றளவும்)

செஸ் விளையாட்டு இந்தியாவில்தான் கண்டு பிடிக்கப்பட்டது.
( நல்லவேளை!!! செஸ்க்கு நடுவில் 'க்' வைத்திருந்தால்.........?????????)

உலகத்திலேயே தபால் நிலையங்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம்.
( நோ கமெண்ட்ஸ்.)

பிரிட்டிஷ் காரர்கள் இந்தியா வருவதற்கு முன்னால் உலகிலேயே பணக்கார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தது.
(அன்று வெள்ளைக்காரன் கொள்ளையடித்தான்,
இன்று கோடீஸ்வரன் கொள்ளையடிக்கிறான். வித்தியாசம் இதுதான்)

கி.பி.1886 வரைக்கும் வைரம் இந்தியாவில் மட்டும்தான் வெட்டி எடுக்கப்பட்டது. முழு உலகமும் இந்திய வைரம்தான்.

(இன்னைக்கு முழு உலகிலும் வைரம் கிடைக்குது, ஆனா இந்தியாவிலதான் இல்லை)

யூதர்களும் கிறிஸ்தவர்களும் கி.மு200 மற்றும் கி.பி52 ஆண்டுகளில் இருந்தே இந்தியாவில் வசித்துவருகின்றனர்.
(இன்றளவும் மைனாரிட்டியாகவே)

பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில்தான் உலகத்திலேயே மிகப்பெரிய புண்ணியஸ்தலம். இது மெக்கா மற்றும் ரோம் நகரைவிட பெரிது. ஏழுமலையானின் தினசரி சராசரி வருமானம்.......(சொல்ல மாட்டேன் கோடிகளின் எண்ணிக்கையை) உலகத்துலேயே ரொம்ப வருமானம் பாக்கும் சாமி இவருதான்[இவரை வச்சு யாரு வருமானம் பண்ணுறாவலோ?]) தினசர் வருபவர்கள் குறைந்தது 30000பேர். (ஐயா, அதவானி இதுபோல கோயில்கள் மடங்களில் சேரும் பணங்களை உருப்படியா செலவழிக்க ஏதேணும் திட்டம் யோசிக்கக் கூடாதா)

உலகத்துலேயே அதிக எண்ணிக்கையில் அரசியல் கட்சிகள் இருப்பதும் இந்தியாவில்தான். ( இந்தப் பெருமையை காப்பாற்ற ஒவ்வொருவரும் கட்சி துவங்கவேண்டும். ஆனா கொள்கையைப் ப்ததி மட்டும் பேசக் கூடாது)

உலகவரலாற்றிலேயே முதன் முறையாக என்ற சொற்றோடரை அதிகம் பயன்படுத்தும் டிவிசேனல்கள் இந்தியாவிலதான் அதிகம்.( இதை விட பெரிய வார்த்தை வேறு ஏதாவது இருந்தா சொல்லுங்க)

அஸ்கு: அண்ணே ஒரு பெரிய நாடான இந்தியாவின் பெருமைகள் இவ்வளவுதானா?

பிஸ்கு: இல்லையில்லை. சொல்லிக் கொண்டே போகலாம். ஆனா எனக்கு பெருமைகளை விட மக்களின் வறுமையும் அறியாமையும்தான் ரொம்ப முக்கியமானதாக படுகிறது.
உலகதுல முதல்முறையா குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வந்தது இந்தியாதான். இன்றளவும் அது முழுவெற்றியடையவில்லை. ப்ல நல்ல திட்டங்கள் வந்தாலும் அறியாமையினால் அவை வெறும் அறிவிப்புகளாக நின்றுவிடுகின்றன. பல திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடைவதில்லை. நிர்வகச் செலவுக்கே நூற்றூக்கு 90 சதவீதம் செலவு ஆகிவிடுகிறது. கம்யுனிஸ்ட்களும் கூட இதுவரைக்கும் உருப்படியா எதையும் சாதிக்கலை. (உதாரணம்- மேற்குவங்கம், கேரளா). மெலும்.......

அஸ்கு: அண்ணே போதும்..போதும்... நிறுத்துங்க..........அழுதுருவேன்.

பிஸ்கு: இந்தியாவின் உண்மையான நிலை நினைத்தால் கண்ணீர்தான்