Showing posts with label poem. Show all posts
Showing posts with label poem. Show all posts

Thursday, April 23, 2009

கருணாநிதி கவிதைக்கு எதிர்கவிதை: ஒன்றுகூடினோம் கொன்றே தீருவோம்




திமுக தலைவர் கருணாநிதி எழுதியுள்ள ஒன்று கூடுவோம் வென்றே தீருவோம் கவிதைக்கு எதிர்கவிதை


உணர்ச்சியுள்ள தமிழரெல்லாம் ஒன்று கூடுவோம்
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றும் வாடிக்கொண்டிருகிறோம்
செல்வா காலம் முதல் சிங்களர் ஆதிக்கம் வீழ்த்த பரணி பாடினோம்
சிறைச்சாலை, சிம்மாசனம் இழப்பு என்று கூறி நடிக்கும் தலைகள் கண்டு வாடினோம்

ஈழ விடுதலைப் போருக்கு இந்திரா காந்தியும் ராஜீவும் இணக்கம் தந்தனர்
அதன் பின்பு வந்தவர் சுணக்கம் காட்டி சுண்டிவிட்டனர்.
விடுதலைப் புலிகள் போராளிகள் என்று முழங்கியோர்
இன்று அவர்களைக் காறுகின்றனர் கரும்புள்ளிகள் என்று
தலைவனை வீழ்த்தினதால் தமிழ்தலைவனது சாவை விரும்புகின்றர்
அதற்Kஆக நம்மை தனிழக தலைவர்களே பிரிக்க முயல்கின்றனர்


சிங்களத்து வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
ஈழத தமிழர்களின் உரிமை
அதை ஒத்துக் கொள்ள மறுத்து
அவர்களுக்கு ஒத்தூதும் நம் அரசியல் சாணக்கியர்கள்
யாரை ஆதரிக்கிறார்கள் எவரை பிரிக்கிறார்கள்

இவர் போல் ஏமாற்றி, எம்மவரின் சாவில் குளிர்காயும்
இழிஞரின் சூழ்ச்சி கண்டு
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இலங்கைத் தமிழர் இல்லாமல் போவதற்கு முன்பு
இறைவனை வேண்டி தமிழராஇ நாம் கூடுவோம்
காங்கிரஸ் கட்சி காக்காது நம் சோதரரை
அவரிடம் கூவி கூவி அறிக்கைவிடுவார்
ஆனால் கேவிக் கேவி அழுவதோ தமிழினமல்லவா
இவர் கூவி விடியல் வந்துவிடப் போவதில்லை
இவர் கூறி தமிழினமும் அழியப் போவதில்லை

முன்னுக்குத் தள்ளி முடிப்போம் இலங்கைப் போரை என்றால்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணனுக்கு தம்பியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? தமிழ் அரசியல்
துரோகிகளின் சேட்டையினால் தூய தமிழினம் தோற்கலாமா?

கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா?
அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு மிகுந்த தமிழரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! வென்றே தீருவோம்.

அஸ்கு: அண்ணே கவித எல்லாம் எழுதுறீங்க. எப்படிண்ணே!

பிஸ்கு: ரொம்ப சிம்பிள். வரிகளை வெட்டி வெட்டி எழுதினா கவிதை. நீட்டமா எழுதினா உரைநடை, யாருக்கும் புரியாதபடி எழுதினா தொல் இலக்கியம்.

அஸ்கு: யாருக்குமே புரியாதபடி பேசினா??????/

பிஸ்கு: அப்படிப் பேசுறவன் லூசா இருக்கணும்........இல்லன்னா இந்திய அரசியவாதியா இருக்கணும்.

அஸ்கு: இந்த இரண்டுமே இல்லன்னா?????

பிஸ்கு: அப்ப அது நீதான்....